Tuesday, January 18, 2011

இத்த தருணமே!

பித்த நீர்க்கும் உத்தி தேடி
சுத்த மார்க்கம் நித்தம் தேடாய் - ஊழறுக்கும்
வித்த யேது? விடை யேது?
மொத்த ஞானமும் இத்த தருணமே!
தத்தை தேட தசை ஆடும்!
வித்தை காட்டி விசை கூட்டும்!
எத்தை தத்தை கிட்டினும்
வித்தை வார்த்து ஊற்றினும் - ஒன்றும்
அற்ற வெளியில் சிக்குவாய்!
அற்ப நிலையில் மக்குவாய்!

Sunday, October 31, 2010

வேறென்ன சாத்தியம்!!!

நகுதல் பொருட்டன்று நட்டல் - மனப்பான்மை
மிகுதற் கணத்தன்று குட்டல் - மனதாபத்தில்
பகுதற் தினத்தன்று தேடி ஒட்டல்!
வெகுவாக கதைபேசி மனம்
இலகுவாக திரிந்தோம்!
குறைவாக நேரம் மட்டுமென
நிறைவாக நேசம் புரிந்தோம்!
ஓருயிர் துடிக்கக் கண்டு ஈருயிரும் துடிப்பதன்றி
வேறென்ன உத்தமம் கண்டதிந்த வானகம்?
எண்ண ஒட்டலினால் ஏற்றம் நிகழலாம்!
உணர்வு ஒட்டலினால் மிஞ்சினால்
உறக்கம் தொலைக்கலாம்! - ஆனால்
உயிர்மை ஒட்டலினால் பூரணம் எட்டலாம்!!
ஒன்றும் கிடைப்பதில்லை!
ஒன்றும் இழப்பதில்லை!
இதுவன்றோ வேதாந்தம்?
உயிரன்றோ நீ எனக்கு!
இதுவன்றி வேறென்ன சாத்தியம்??!!

English translation:
Friendship is not just for loose talks and jokes.
It is about hitting hard on the head with attitude gets high.
It is about going all the way to patch when there is separation.
There were so many moments with lighthearted talks.
Time was the only thing in scarce.
Seeing one soul in grief, the other soul naturally gets affected.
What other wonder has this sky seen?
Intellectual sync can bring career lift.
Emotional sync can, after all, loose sleep.
But soul sync can bring completion.
Nothing to gain. Nothing to loose.
Isn't this vedanta?
You are my soul. What else could be possible??!!



Wednesday, August 04, 2010

Collection of recent Kavithaigal

வில்லினைப்பூட்டி வன்மத்தை தீர்த்திடும் உத்தியை
குய புத்தியை - ஒரு
வேதவன் கோலம் தரித்து நடத்திட்ட வைணவா!
- Tried to write something that coincides (padham by padham) with original bharathiyar's lines but with completely different meaning (lines were:
பல்லினைக்காட்டி வென்முத்தை பழித்திடும் வள்ளியை
குற வள்ளியை - ஒரு
பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா!)



பார்க்கும் வழியெங்கும் விதி பல்லிளிப்பதேனோ? தோற்கும் வலி போதும்..இனி ஒரு கணமும் தாளாதென்று உயிர் துடி துடிப்பதேனோ?
- When i had a worst day at work :(


உயிரை துச்சமென மதித்ததால் நீ உயிர்த்தாய்..
'நான்' மரித்தேன்..வேறு மனம் தரித்தேன்...
உயிர் விழித்தேன்...
என் உணர்வு விழிக்குமுன் நீ சென்றுவிடு..
இல்லை எனை கொன்றுவிடு..
- My kavithai when seeing Aish falling from the branch (Raavanan)

Sunday, August 23, 2009

கவிதை போர்!

I am copy pasting a very good quality Tamil verse war between Vinodh and myself in facebook (http://www.facebook.com/profile.php?id=100000050832291&ref=ts).

Vinodh Rajagopal:
ஒரு வண்ணத்து பூச்சியின் மரணம்
பனி படர்ந்த இளங்காலை நேரம் - சோம்பல் முறித்து தோட்டத்தில் நிற்கையிலே - அழகிய வண்ணத்து பூச்சியொன்று கண்டேன் - பசும்பொன்னின் மஞ்சளும் வெற்றிலை பச்சையும் - மாலைச் சூரியனின் இளஞ் சிவப்பும் - கத்திரி பூவின் ஊதாவும் - ரம்மியமாய் நிறைந்திருந்தது அதன் சிறகில்.

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: அது அது அதன் அதன் இயல்பாயிருக்கையில், நேரம் தூரம் கடந்த ஒரு நிலையில்லா நிலையில் நான் எனதியல்பில் சிறகடிதிருந்தேன்....என் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் பெரிய கண்களை உடைய உன் விழியிலிருந்த எனது நிழலுடன் தொடர்பிலிருந்தேன்..இதை விட உன்னுடன் தொடர்பு கொள்ள சாதாரண பூச்சியாகிய எனக்கு தெரியவில்லை!



Vinodh Rajagopal:
ஒரு வண்ணத்து பூச்சியின் மரணம் (தொடர்ச்சி )
அதன் படபடப்பு என்னை அழைப்பதாயெண்ணி - அவ்வழகை எனதாக்கிக் கொள்ள விழைகையிலே - என் காலடியில் சிக்கிக் கொண்டது அப்பூச்சி - சட்டென்று உடைந்தது என் உலகம் - மிதிபட்டது பூச்சி என்றாலும் - என் உள்ளங்காலில் ஒட்டிக் கொண்ட - அதன் வண்ணங்களை பார்க்கையிலே - நான் மரணித்து போனேன்.

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: உன் மனதின் விருப்பங்கள்/ஏக்கங்கள்-க்கு எனது சிறகில் வடிவம் தேடும் உனக்கு, உயிர் வரைந்த உருவங்கள் கொண்ட எனது இறக்கையின் அழகு தெரிய வாய்ப்பில்லைதான்!!

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: Moreover (?!), மரணித்து போனதோ நீ என்ற உனது எண்ணங்கள் மட்டும் தான்!

Vinodh Rajagopal:
ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சியின் சிறகும் பேரழகு என்பதை நான் மறுக்கவில்லை என் கனவின் பிம்பத்தை பிரதிபலிக்கும் சிறகை மட்டுமே நான் தேடுகிறேன் மிதிபட்ட பூச்சியினும் மிதித்த எனக்குதான் அதிக வலி என்பது பூச்சிக்கோ அந்நிகழ்வை குற்றஞ்சாட்டுபவனுக்கோ புரிய வாய்ப்பில்லைதான்.

Vinodh Rajagopal:
நானும் என் எண்ணமும் ஒரு புள்ளியில் இணைந்ததிருக்கையில் இரண்டில் எது மரணித்தாலும் என் உடல் வெறும் கூடுதான் 7 hours ago

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி (கொஞ்சம் hitech): சிறகை பிய்த்து பார்த்து சொந்த எதிர்பார்ப்புகளோடு tkdiff செய்து பார்க்கும் மனப்பான்மைக்கு எந்த உயிர்ப்புள்ள ஜீவனும் நிறை உணவில்லைதான்!

Sadeesh Kumar:
வண்ணத்துபூச்சி: இறந்த எண்ணங்களின் சவத்தின் மீதேறி இரங்கற்பா பாடும் சுய பச்சாதாப மனம் யாரோ?

Vinodh Rajagopal:
தன் தவறை ஒப்புக்கொள்வது தமிழ் வீரமேயன்றி சுய பச்சாதாபத்தின் வெளிப்பாடில்லை கண்டீர் நான் சுத்த வீரனென்று எனக்கு தெரியும் ஓநாயை இருந்து பார் அதன் நியாயம் புரியும்

(Another post):

Vinodh Rajagopal:
தீரா காமத்தில் எரிந்துருகுமாம் - மென் ஸ்பரிசம் பட்டால் உடைந்து நொறுங்குமாம் - இளமையில் கூத்தாடி முதுமையில் தள்ளாடி - நீரில் எழுத்தாகும் யாக்கை

Sadeesh Kumar:
எரித்துருக்கும் தீராக் காமம் உயிர் கொடுக்குமாம்! மென் ஸ்பரிசத்தில் குழைந்து உருகுமாம்! இளமையில் விளையாடி முதுமையில் வசைபாடி நுன்னுயிர்க்கு தன்னையே தானமளிக்கும் யாக்கை! முழுதும் புரிந்திருக்குமாம் "Matter=Energy"-என்னும் வாக்கை!

Sadeesh Kumar:
"சும்மா சும்மா நுளைக்காத உன் மூக்கை!" - என்றெல்லாம் comedy அடிக்க வேணாம்!

Vinodh Rajagopal:
எப்பொழுதும் matterileya சிந்தித்து Energyயை வீணடிக்கும் தங்கள் கூற்று நிஜமாய்தான் இருக்கும்

Monday, March 31, 2008

மீண்டும் ஒரு கவிதை!

தனித்திருந்த இரவுகளில் உயிர் வளர்த்து
பிறிதொரு தருணத்தில் அதை விடுவாய்!
அச்சம் வந்து பிணம் தின்ன
மீண்டும் உயிர்த்து எழுவாயோ??

English:
thanithiruntha iravugalil uyir valarthu
pirithoru tharunathil athai viduvaai!
achcham vanthu pinam thinna
meendum uyirthu ezhuvaayo??

Monday, November 06, 2006

Eppadi irukku? - எப்படி இருக்கு?

Thanithiruntha iravugalil
uyir valartha saatchiyaai
Meesaiyil aanmai!
Aayinum enna thudaithum pogavillai
mudhal kaadhal eeram!!

தனித்திருந்த இரவுகளில்
உயிர் வளர்த்த சாட்சியாய்
மீசையில் ஆண்மை!
ஆயினும் என்ன துடைத்தும் போகவில்லை
முதல் காதல் ஈரம்!!